யாழில் இடம்பெறும் பெற்றோல் செற் குசும்புகள்!

நாடளாவிய ரீதியில் கடந்த சில மாதங்களாக எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

அதேவேளை எரிபொருள் கப்பல்கள் பல தடவைகள் நாட்டிற்கு வருகை தந்திருப்பினும் குறித்த எரிபொருட்கள் ஒழுங்கான முறையில் மக்களுக்கு விநியோகிக்கப்படவில்லை எனவும் பொதுமக்கள் தரப்பில் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

அதேவேளை கறுப்புச் சந்தையில் பெற்றோல் 1லீட்டர் 3000- 4000ரூபா வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இவ்வாறான நிலையில் அரசாங்கத்தால் கடந்த சில வாரங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பார்கோட் நடைமுறையில் எரிபொருள் விநியோகம் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இடம்பெற்றாலும் தற்போது வரை எரிபொருளுக்கான வரிசை நாளுக்கு நாள் நீண்டுகொண்டே செல்கிறது.

இது இவ்வாறு இருக்கும் நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன்னால் காத்திருக்கும் வாகனங்களுக்கு சில சாரதிகள் செய்கின்ற குசும்புத்தனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இவ்வாறான சம்பவம் ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ் நகரில் பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

யாழில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அடுத்த நாளுக்கான எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றில் என்ன பார்க்கிறாய் இடம் தரேலாது மாறு என்றவாறாக நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் காமெடி கலந்த டயலொக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இதை பார்த்த அங்கிருந்த சாரதிகள் ஒரு பக்கம் எரிபொருள் இல்லாது தவிக்கின்றோம் இவர்கள் தமது குசும்புகளால் எம்மை சிரிக்க வைக்கின்றார்கள் என முனுமுனுத்னர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *