நாட்டில் கொவிட்-19 வைரஸின் மற்றொரு அலையைத் தடுக்க அதிகபட்ச முயற்சி எடுக்கப்பட வேண்டும்.
இந்நிலையில் முதல் மற்றும் இரண்டாவது கொவிட் அலைகளை நாங்கள் எதிர்கொண்டது போன்ற சூழ்நிலையை எதிர்கொள்ள எங்களுக்கு வலிமை இல்லை என்று அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) செயலாளர் டாக்டர். ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.
நாடு தற்போது இருக்கும் நிலையில் இனி பொது முடக்கத்திற்கு செல்ல முடியாது என்று கூறினார். எனவே, இதுபோன்ற அலைகள் எழாமல் இருக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமும் பதிவாகும் கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது எனவும் தெரிவித்தார்.
பிறசெய்திகள்