
வவுனியா – ஆச்சிபுரம் பகுதியில் நேற்று இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் குடும்பத் தலைவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அந்தப் பகுதியைச் சேர்ந்த ரஞ்சா என்று அறியப்பட்ட யோன்சன் (வயது – 30) என்ற குடும்பத் தலைவரே இவ்வாறு சாவடைந்துள்ளார்.
நேற்று மாலை அந்தப் பகுதிக்குச் சென்ற வன்முறைக் கும்பல் ஒன்று யோன்சன் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. அவரது முகம் உள்பட உடலில் பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டன. அவரது ஒரு கையும் துண்டாடப்பட்டது. இந்த நிலையில் அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் சிதம்பரபுரம் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக வவுனியா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.