அங்குணுகொலபெலெஸ்ஸ சிறைச்சாலையின் பாதுகாப்பு கம்பி வேலிக்கு அருகாமையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தடைசெய்யப்பட்ட பொருட்கள் மற்றும் போதைப்பொருட்களை விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
சிறைச்சாலையில் கடமையில் ஈடுபட்டுள்ள விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் குழுவினால் நேற்று (31) சோதனை மேற்கொள்ளப்பட்டது.
பாதுகாப்பு கம்பி வேலிக்கு அருகில் உள்ள காடுகளில் சோதனையிட்டபோது 4 கையடக்க தொலைபேசிகள், 2 தொலைபேசி சார்ஜர்கள், 6 மின்கலங்கள், இரண்டு 2GB மெமரி அட்டைகள் மற்றும் 3 அங்குலம் நீளமான 295 புகையிலை சுருட்டுகள் என்பன அடங்கிய 3 பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட பொருட்கள் மேலதிக விசாரணைக்காக சிறைச்சாலை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
பிறசெய்திகள்