
வெளிநாட்டு தபால் கட்டணங்கள் இன்றைய தினம் முதல் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டதற்கு இணங்க இன்றைய தினம் முதல் வெளிநாட்டு தபால் கட்டண அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரட்னவை மேற்கோள்காட்டி அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
எரிபொருள் விலை, டொலர் பெறுமதி, விமானக் கட்டணங்கள், பேருந்து மற்றும் புகையிரத கட்டண உயர்வு காரணமாக இவ்வாறு தபால் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
கடந்த ஜனவரி மாதம் 19ம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளிநாட்டு தபால் கட்டண அதிகரிப்பு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு ஆண்டுகளின் பின்னர் தபால் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
தற்போதைய கட்டணங்களை விடவும் இரண்டு மடங்காக வெளிநாட்டு தபால் கட்டணங்கள் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வெளிநாட்டு விமான தபால் கட்டணங்களும் வெளிநாட்டு கப்பல் தபால் கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன.
பிறசெய்திகள்