”ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்சவே. இந்த விடயத்தை தெரியாதவர்கள், இலங்கையில் வாழும் நபராக இருக்க முடியாது. அன்றும், இன்றும், என்றும் அவரே தலைவர்.”
– இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று (01) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் , சர்வக்கட்சி அரசமைப்பதற்கு ஜனாதிபதிக்கு மொட்டு கட்சி ஆதரவு வழங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
பிறசெய்திகள்