
தற்சமயம் நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்படுகின்ற போதிலும், இந்த விவாதங்களில் பல அரசியல் சூதாட்டங்களை மாற்றி அமைச்சர் பதவிகளை பகிர்ந்து கொள்வதையே காட்டுவதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அதேவேளை இந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி ஆராயாது அமைச்சர்களை சேர்த்து நாட்டிற்கு பாரத்தை சுமத்தாமல் நாட்டைப் பற்றி புதிய முறைமையின் கீழ் தேசிய ஒருங்கிணைப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
நாட்டைப் பற்றி சிந்தித்து நாட்டுக்கு முன்னுரிமை வழங்க வேண்டிய தருணம் வந்துள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர்.
அனைத்து ஆதரவாளர்களும் எதிர்க்கட்சிகளும் நாடாளுமன்றக் குழு அமைப்பின் மூலம் ஐக்கிய நாட்டைக் கட்டியெழுப்பும் திட்டத்திற்கு சாதகமான பங்களிப்பை வழங்க முடியும் என்றும் அது தொடர்பில் தானும் சமகி ஜன பலவேக மற்றும் சமகி ஜன சந்தனமும் நம்பிக்கையுடன் இருப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
பிறசெய்திகள்