வீதியை விட்டு விலகி மரத்தில் மோதிய வாகனம்; இருவர் பலி, மூவர் காயம்!

தங்காலை ஹேனகடுவ பிரதேசத்தில் வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி மரம் ஒன்றில் மோதியதில் இருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையான 35 வயதுடைய லலித் சுஜீவ மற்றும் 30 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான சுரேஷ் உதயங்க ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த ஒருவர் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையிலும் மற்றைய இருவர் தங்காலை ஆதார வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *