
தற்போது பெய்து வரும் கனமழையால் களுகங்கையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
இதனால், பெல்மடுல்ல, நிவித்திகல, இரத்தினபுரி, குருவிட்ட, அயகம மற்றும் அலபத்த ஆகிய தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை, மேல், சப்ரகமுவ, வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல பிரதேசங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பிறசெய்திகள்