பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி புதுக்­கு­டி­யி­ருப்பு பிரதேச செயலர் மீது பழிவாங்கல்

புதுக்­கு­டி­யி­ருப்பு பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி என் மீதுள்ள காழ்ப்­பு­ணர்ச்சி கார­ண­மா­கவே அபாண்­ட­மான குற்­றச்­சாட்டை சுமத்­தி­யுள்­ளார் இவ்வாறு புதுக்­கு­டி­யி­ருப்பு பிர­தேச செய­லர் எஸ்.ஜெய­காந்த் தெரி­வித்­துள்­ளார்.

புதுக்­கு­டி­யி­ருப்பு பிர­தேச செய­ல­கம் மற்­றும் செய­ல­ரின் தனிப்­பட்ட தங்­கு­மி­டத்­தில் இருந்து பொலி­ஸார் நேற்­று­முன்­தி­னம் இரவு சனிக்­கி­ழமை இரவு 65 லீற்­றர் எரி­பொ­ருளை மீட்டு இருந்­த­னர்.

அது தொடர்­பில் பிர­தேச செய­லர் தெரி­விக்­கை­யில்,

அலு­வ­லக மின்­பி­றப்­பாக்கி மற்­றும் வாகன தேவைக்­காக சுமார் 50 லீற்­றரை சேமித்து வைத்­தி­ருந்­தோம்.

அதே­வேளை என்­னு­டைய சொந்த தேவைக்­காக 8 லீற்­றர் பெற்­றோலை கடந்த இரு வாரங்­க­ளில் பெற்று சேமித்து வைத்­தி­ருந்­தேன். எனது வீடு யாழ்ப்­பா­ணத்­தல் உள்­ள­மை­யால், வீடு சென்று வர மோட்­டார் சைக்­கிள் தேவைக்கு என்று அதனை சேமித்து வைத்­தி­ருந்­தேன்.

அத்­து­டன் கடந்த காலங்­க­ளில் எரி­வாயு தட்­டுப்­பாடு நில­விய வேளை­யில் சமை­ய­லுக்­காக வாங்கி வைத்­தி­ருந்த சுமார் 3 லீற்­றர் மண்­ணெண்­ணெய் என்­ப­வற்­றையே பொலி­ஸார் மீட்­ட­னர்.

அலு­வ­ல­கத் தேவைக்­கா­க­வும், சொந்­தத் தேவைக்­கா­க­வும் வைத்­தி­ருந்த எரி­பொ­ருளை மீட்டு விட்டு, ஏதோ தாம் பெரும் பதுக்­கலை கண்­டு­பி­டித்­தது போன்று செய்­தி­களை பரப்­பி­யுள்­ள­னர்.

புதுக்­கு­டி­யி­ருப்பு பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி கடந்த வெள்­ளிக்­கி­ழமை நடை­மு­றை­களை மீறி இரண்டு எரி­வாயு சிலிண்­டரை பெற முனைந்­துள்­ளார். அதற்கு எமது பணி­யா­ளர்­கள் மறுப்பு தெரி­வித்து எனது சம்­ம­தத்தை பெற்று வரு­மாறு கூறி இருந்­த­னர்.

அதே­போன்று மறு­நாள் விசு­வ­மடு எரி­பொ­ருள் நிரப்பு நிலை­யத்­தி­லும் நடை­மு­றை­களை மீறி தென்­னி­லங்­கை­வா­சிக்கு டீசல் பெற்­றுக்­கொ­டுக்க முயன்­றுள்­ளார். அதற்­கும் எமது கிராம அலு­வ­லர் இட­ம­ளிக்­க­வில்லை.

அதே­வேளை பொலி­ஸார் வேறு நபர்­க­ளின் மோட்­டார் சைக்­கிள்­களை பெற்று வந்து எரி­பொ­ருள் பெற்று செல்­வ­தனை தடுத்து இருந்­தோம். அத்­து­டன் நடை­மு­றை­களை குழப்பி சட்­ட­வி­ரோ­த­மாக எரி­பொ­ருளை பெற முனைந்­த­வர்­க­ளை­யும் தடுத்­துள்­ளோம்.

இவ்­வா­றான நிலை­யி­லையே எம் மீது வீண் பழி சுமத்­தும் நோக்­கு­டன் எமது அலு­வ­ல­கத் தேவை மற்­றும் எனது தனிப்­பட்ட தேவைக்­காக சேமித்து வைத்­தி­ருந்த எரி­பொ­ருளை மீட்டு அபாண்­ட­மான குற்­றச்­சாட்டை என் மீது சுமத்­தி­யுள்­ள­னர்=என்­றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *