அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின் கேந்திர இடமான கொழும்பு காலிமுகத்திடலில் சடலங்கள் கரையொதுங்குவது அதிகரித்துள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
எமது நாட்டின் பொலிஸார், புலனாய்வுப்பிரிவினர் இணைந்து ஜனாதிபதி மாளிகையில் கழிவறையில் சிறுநீர் கழித்தவரைக்கூடு கைதுசெய்துள்ளனர்.
அத்தகைய திறமைவாய்ந்தவர்களே பொலிஸ் பிரிவில் காணப்படுகின்றனர்.
எனினும் எமது நாட்டு மக்கள் கொழும்பு காலிமுகத்திடலில் சடலமாக மீட்கப்படும் போது அந்த சடலங்கள் யாரினுடையது என்பதை அடையாளம் கண்டுகொள்ள முடியாத நிலைமை காணப்படுகின்றது எனவும் தெரிவித்தார்.
பிறசெய்திகள்