
பதுளை,ஓகஸ்ட் 01
பதுளை முதல் கொழும்பு வரையிலான இரவு நேர தபால் ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலைக் காரணமாக குறித்த தபால் ரயில் சேவைகள் இரத்த செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கொழும்பு கோட்டையில் முதல் பதுளை வரையிலும் பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை வரையில் இயக்கப்படவிருந்த இரு ரயில் சேவைகள் இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.