நாட்டில் இன்று இரு பாராளுமன்றம், இரு அரசாங்கம்; நடுவில் மக்கள் படும்பாடு!

நாட்டில் இன்று இரண்டு பாராளுமன்றம், இரண்டு அரசாங்கம் காணப்படுவதாகவும் இவற்றை மக்கள் நடத்தி செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் ஒன்றிணைந்த பிரஜைகள் முன்னணியின் ஒருங்கமைப்பாளர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மரத்தால் விழுந்தவனை மாடு மிதித்த கதையே தற்போது நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

மக்களது பணத்தில் எமது பணத்தில், இரண்டு பாராளுமன்றம், இரண்டு அரசாங்கத்தை நடத்தும் நிலைமை இன்று ஏற்பட்டுள்ளது.

ராஜபக்ஷ மொட்டு கட்சியின் பாராளுமன்றம் ஒன்று காணப்படுகின்றது. ரணில் விக்கிரமசிங்கவின் பாராளுமன்றம் ஒன்று காணப்படுகின்றது.

ராஜபக்ஷ மொட்டுக் கட்சியின் அமைச்சரவை ஒன்று உள்ளது. பிரதமர் ஒருவர் உள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க அமைத்த அமைச்சரவையும் அமைச்சுக்களும் உள்ளன.

இந்த இரு பாராளுமன்றத்தையும் நாட்டு மக்கள் நடத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

பிரதமர் திணேஸ் குணவர்தன தனது தலைமையில் பாராளுமன்றத்தை செயற்படுத்துகின்றார்.

அதேபோன்று ரணில் விக்கிரமசிங்க தனது தலைமையில் பாராளுமன்றத்தை நடத்துகின்றார்.

அதில் அமைச்சர்களும் இருக்கின்றனர். பிரதமர் ஒருவரும் இருக்கின்றனர்.

ரணில் விக்கிரமசிங்கவின் பிரதமாராக சாகர காரியவசம் செயற்பட்டு வருகின்றார்.

அதன் பின்பு அமைச்சர்களை நியமிக்க வேண்டியுள்ளது.

தனது கட்சியை சேர்ந்தவர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கான செயற்பாட்டில் ரணில் விக்கிரமசிஙக ஈடுபட்டு வருகின்றார்.

இந்த இரண்டு பாராளுமன்றத்திலும் நேர்மை இல்லை.- என்றார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *