“ வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்” எனும் 100 நாட்கள் செயல்முனைவின் முதல் நாள் போராட்டம் மன்னாரில் இன்று(01.08.2022) இடம்பெற்றது.
இப் போராட்டத்தில் மன்னார் மாவட்டத்தினைச் சேர்ந்த மக்கள்,சிவில் அமைப்பினர் ,பெண்கள் அமைப்பினர், செயற்பாட்டாளர் என 200 இற்கும் மேற்பட்டோhர் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கான கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் எனக் கோரி நின்றனர்.
இப்போராட்டமானது மன்னாரிலுள்ள நகரின் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கதமாகும்.
தொடர்ந்து 02ம் நாள் செயல் முனைவானது நாளையதினம் கிளிநொச்சியில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிறசெய்திகள்