வெள்ளை வேனில் கடத்தப்பட்ட களனி பல்கலைக்கழக மாணவன் விடுவிப்பு

களனி பல்கலைக்கழகத்தின் 4 ஆம் வருட மாணவர் ஒருவர் வெள்ளை வேனில் வந்தோரால் கடத்தப்பட்டு, மூன்று மணி நேரத்தின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக, களனி பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கம் தெரிவித்தது.

ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 31) பிற்பகல் 3.00 மணியளவில், களனி பல்கலைக்கழகத்தை ஊடறுத்து செல்லும் வீதியில் வைத்து, பல்கலைக்கழகத்தின் 4 ஆம் வருட முகாமைத்துவ பீட மாணவன் ஒருவர் இவ்வாறு கடத்தப்பட்டதாக அச்சங்கம் தெரிவித்தது.

எவ்வாறாயினும் குறித்த மாணவன் 3 மணி நேரத்தின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் போராட்டங்களில் ஈடுபடும், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட பல்கலை மாணவர்கள் தொடர்பில் கடத்தல்காரர்கள் விசாரித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *