நல்லூர்க் கந்தன் திருவிழா காலத்தை சகல மக்களும் புனிதமாகப் பேணுங்கள் எனத் தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலயத் தலைவர் , செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார் .
இது தொடர்பில் அவர் நேற்றுத் திங்கட்கிழமை ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
குடும்பம் குடும்பமாக ஆலய தரிசனம் செய்யுங்கள். பண்பாட்டு உடைகளோடு வாருங்கள் . வழிபாட்டுக்கு உரிய உடைக்கு மாறாக வருபவர்ளால் ஏற்படும் இடையூறு வெறுக்கத்தக்கது .
சுற்றுலாவிற்கு வரும் காலமல்ல . மனதைச் சுத்தப்படுத்தி மாசிலா வாழ்வு கேட்கும் காலம் இது . இரண்டு ஆண்டுகள் பெரு விழாக் காலத்தை நாம் உலகத்தில் ஏற்பட்ட கொடிய நோயால் இழந்து விட்டோம் .
இம்முறையும் நோய்களின் அச்சம் பற்றிய கருத்து உலாவுகிறது .
எனவே எங்களை நாங்கள் காத்துச் செயற்பட வேண்டும் . ஆடம்பரங்களைத் தவிருங்கள் . அதிக ஆபரணங்களை அணிந்து கொள்வதைத் தவிர்த்து உதவுங்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிறசெய்திகள்