பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் குடும்பத்திடம் இருந்து இளவரசர் சார்லஸ் நிதியுதவி பெற்றதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் . ஒசாமாவின் சகோதரரான ஷபீக் பின்லேடனிடம் இருந்து 2013 ஆம் ஆண்டு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது .
ஆனால் , இந்த தொகை , பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் அறக்கட்டளைக்கு சென்றதால் , தனிப்பட்ட காரணங்களுக்காக பயன்படுத்தப்படவில்லை எனக் கூறப்படுகிறது . பின்லேடன் குடும்பத்தினரிடம் இருந்து பெருந்தொகை நன்கொடையாக பெறுவது அரச குடும்பத்திற்கு சிக்கலை ஏற்படுத்தும் என அப்போது அரண்மனை அதிகாரிகள் தரப்பு எச்சரித்ததாக கூறப்படுகிறது .
இந்த விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில் . இதுவரை இளவரசர் சார்லஸ் தரப்பில் இருந்து எந்த ஒரு அறிக்கையும் இதுவரை வெளியிடப்படவில்லை .
பிறசெய்திகள்