பேருந்து கட்டணங்களை குறைப்பது தொடர்பில் வெளியான தகவல்

டீசல் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும் அதற்கு இணையாக பேருந்து பயண கட்டணங்களை மீண்டும் குறைப்பது பயனற்ற விடயம் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எதிர்காலத்தில் மீண்டும் டீசல் விலை குறையும் பட்சத்தில் பேருந்து பயண கட்டணம் தொடர்பில் தீர்மானம் ஒன்றை எட்ட முடியும் என அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

ஒரு லீற்றர் ஒட்டோ டீசலின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஒரு லீற்றர் ஒட்டோ டீசலின் புதிய விலை 430 ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு 10 மணிமுதல் அமுலாகும் வகையில் இந்த விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கனியவள கூட்டுதாபனம் அறிவித்துள்ளது.

எனினும், ஏனைய எரிபொருட்களின் விலை மாற்றமின்றி தொடரும் என கனியவள கூட்டுதாபனம் அறிவித்துள்ளது.

இதேவேளை பெறறோலியக் கூட்டுதாபனத்தின் விலைக்கு அமைய லங்கா ஐஓசியும் ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலையை 10 ரூபாவால் குறைத்துள்ளது.

இதேவேளை, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து தாம் விலகியுள்ளதாக சஷீ வெல்கம தெரிவித்துள்ளார்.

பதவியில் இருந்து விலகுமாறு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் விடுத்த பணிப்புரைக்கமைய இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *