சரியான முறையில் இலங்கைக்கு பணம் அனுப்பினால் மேலும் 02 நன்மைகள் – மனுஷ

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் சட்டப்பூர்வமாக பணம் அனுப்புவதை ஊக்குவிக்கும் வகையிலான இரு யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வங்கி முறை மூலம் சட்டப்பூர்வமாக பணம் அனுப்பும் யோசனைகளுக்கு அமைச்சரவை நேற்று அங்கீகாரம் வழங்கியதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இதன்படி, இலங்கைக்கு சட்டப்பூர்வமாக அனுப்பப்பட்டுள்ள பணத்தின் அடிப்படையில் புதிய கடமையற்ற கொடுப்பனவை அறிமுகப்படுத்துவது ஒரு ஆலோசனையாகும்.

புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் இலங்கையர்களால் சட்டரீதியாக அனுப்பப்படும் பணத்தின் 50 வீதத்திற்கு சமமான பெறுமதியான மின்சார வாகனத்தை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை அறிமுகப்படுத்தும் முறைக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, விமான நிலையத்தில் டொலரில் பணம் செலுத்தும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களுக்கு எரிபொருள் அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இணக்கம் தெரிவித்துள்ளதாககூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *