அம்பன்பொலவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்!

நேற்று (01) அம்பன்பொலவில் சந்தேகத்திற்கிடமான காரொன்றை சோதனையிட்ட பொலிஸ் சார்ஜன்ட் உடன் நிற்காமல் ஓடிய கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

பின்னர், பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்ட பொலிஸ் சார்ஜென்ட்டும் விடுவிக்கப்பட்டதுடன், காரைச் சோதனையிட்ட போது, ​​பொலிஸ் பிடியில் பல ஹெரோயின் பொதிகள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் காரின் ஓட்டுனர் மற்றும் அங்கிருந்த இரண்டு பெண்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

அம்பன்பொல வைத்தியசாலைக்கு அருகாமையில் இந்த சந்தேகத்திற்கிடமான கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக அம்பன்பொல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரில் இரண்டு பெண்கள் இருந்ததால், பெண் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை அழைத்து வந்து அம்பன்பொல பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லுமாறு காரின் சாரதிக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

எனினும், அம்பன்பொல பொலிஸ் நிலையத்தை கடந்து நிற்காமல் அதிவேகமாக கார் செலுத்தியதால், ஏழு கிலோமீற்றர் தூரம் வரை காரை துரத்திச் சென்ற பொலிஸ் குழுவினர், நிகவலயாய பிரதேசத்தில் காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *