சர்வக்கட்சி அரசாங்கத்திற்கு சம்பந்தன் ஆதரவு

கொழும்பு, ஓகஸ்ட் 02

சர்வகட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனுப்பி வைத்துள்ள கடிதத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சாதகமான பதிலினை வழங்கியுள்ளார்.

இந்த நிலையில், அவர் தலைமையிலான அணியினருடன் ஜனாதிபதி நேரில் பேச்சு நடத்துவார் என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

சர்வகட்சி அரசு தொடர்பில் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேரில் பேச்சு நடத்துவார் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, சர்வகட்சி அரசாங்கத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒத்துழைப்பு எந்த விதத்தில் அமையும் என்பது தொடர்பில் ஜனாதிபதி கேட்டறிவார் எனவும் பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திகழ்கின்றது.

எனவே, நாட்டின் தேசிய பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒத்துழைப்பும் பங்களிப்பும் இன்றியமையாதது எனவும் பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *