திருமலை, ஓகஸ்ட் 02
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கந்தளாய் பகுதியில் வைத்து 2,740 லீற்றர் டீசலுடன் நால்வரை கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த நபர்கள் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக 2,740 லீற்றர் டீசலை கந்தளாய் டிப்போவிலிருந்து பொலன்னறுவை ஹிங்குராகொடைக்கு எடுத்து செல்லும் போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து லொறியின் சாரதி உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கந்தளாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய இந்தச் சொதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. சந்தேக நபர்கள் டீசலை கொண்டு செல்வதற்கு பயன்படுத்திய குளிரூட்டப்பட்ட லொறி கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களை கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
