
கொழும்பு. ஓகஸ்ட் 02
சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் முக்கிய கலந்துரையாடல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பில் இன்று(செவ்வாய்கிழமை) மாலை குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.