வைத்தியசாலையின் பணிப்பாளராக கடமையாற்றுகின்ற பொழுது பல்வேறு குறைபாடுகள் ,குற்றங்கள் சுமத்தப்பட்டிருந்தன.எனவே இது தொடர்பாக விரைவில் சுகாதார அமைச்சிற்கு கடிதத்தின் மூலம் தெரிவித்து இதற்கான விசாரணைகள் மூலம் தீர்வினை பெற்றுக்கொள்ள இருப்பதாக யாழ் போதனா வைத்தியசாலையின் Dr .த.சத்தியமூர்த்திதெரிவித்திருந்தார்.
இன்றைய தினம் யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்திருந்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது;
வைத்தியசாலையின் பணிப்பாளராக கடமையாற்றுகின்ற பொழுது பல்வேறு குறைபாடுகள் ,குற்றங்கள் சுமத்துகின்றது என்பது காலத்திற்கு காலம் இடம்பெறுகின்ற விடயமாகும்.எனவே இது தொடர்பாக தெளிவாக அதற்கான பதில்களை வழங்கிக்கொண்டிருக்கிருக்கிறோம்.
குறிப்பாக எந்த முறைப்பாடுகளாக இருந்தாலும் அவற்றை தீர விசாரித்து தீர்வுகளை வழங்க முயற்சிக்கின்ற போது வைத்தியசாலை அபிவிருத்தி பாதையினை நோக்கி வரும் .ஆகவே இந்த குற்றச்சாட்டுக்கள்,முறைப்பாடுகள் ,சுகாதார அமைச்சுக்கு எழுதப்படும் கடிதங்கள் ,ஊடகங்கள் ஊடாக பிரசுரிக்கப்படும் செய்திகள் அதனை சாதகமான மன நிலையுடன் எதிர்கொண்டு அவற்றில் உள்ள உண்மையான நிலைகளை எடுத்துரைப்பதன் மூலமும் வைத்தியசாலை மேம்படுத்தலாம்.,
தற்போது இருக்கும் சூழ்நிலையில் யாரும் எந்த குற்றச்சாட்டுக்களையும் முன் வைக்கலாம் .இதற்கு ஊடகங்கள் என்ற ரீதியில் உண்மைத்தன்மையினை அறிந்து பிரசுரிப்பது நன்று .
வைத்தியசாலை என்பது தனிப்பட்ட பணிப்பாளருக்கு உரித்தானது அல்ல .பொது மக்களுக்கு சேவைகள் சென்றடையும் நிலையமாகும் ,எனவே சேவையில் ஏற்படுகின்ற குறைப்பாடுகளாக இருக்கலாம்.ஆகவே இதனை நிவர்த்தி செய்ய வேண்டும்.
சுட்டிக்காட்டப்படும் அனைத்து விடயங்களும் சுகாதார அமைச்சிற்கு கடிதம் எழுத இருக்கின்றேன்.விரைவில் அவற்றை விசாரணை செய்து உரிய தீர்வை வழங்க வேண்டும் ,ஏனெனில் இந்த குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளாது விட்டால் மக்கள் மத்தியில் ஒரு பிழையான கருத்தை கொண்டு செல்வதுடன் இந்த சேவைகளில் பாதிப்புக்கள் ஏற்படுத்தும்.
மேலும் இந்த விடயங்கள் தொடர்ப்பாக தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி உரிய தீர்வினை பெற வேண்டும் .எனவே எனது வரம்புக்குட்பட்ட கடமைகளை செய்வதற்கு எப்பவும் தயங்க மாட்டேன்.என்றார் .