
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் நேற்றிரவு கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களில் ஒருவரை ஆகஸ்ட் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, ஏனைய சந்தேகநபர்கள் இருவருக்கு நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொழும்பு 03 இல் உள்ள தனிப்பட்ட இல்லத்திற்கு ஜூலை 09 ஆம் திகதி தீவைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மூவரைக் கைது செய்திருந்தது.
நேற்றிரவு (ஆகஸ்ட் 01) பிலியந்தலை மற்றும் நாரஹேன்பிட்ட பகுதிகளில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 18 மற்றும் 22 வயதுக்கு இடைப்பட்டவர்கள், மடபாத மற்றும் கொழும்பு 05 ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடுவதாக போலீசார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் தொடர்பிலான தகவல்களை வட்ஸ்அப் அல்லது தொலைபேசி அழைப்புகள் மூலம் பின்வரும் தொடர்பு எண்கள்: 0718 594950 / 0718 594929 / 0112 422176 தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பிறசெய்திகள்