கிழக்கு மாகாண நிறுவனங்களின் தலைவர்களுக்கு இடமாற்றம்!

கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக ஒரே பதவியில் கடமையாற்றிய திணைக்களத் தலைவர்கள் குழுவொன்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தின் ஆலோசனைக்கு அமைய இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.

நீண்ட காலமாக ஒரே திணைக்களத்தில் பணிபுரிந்ததாலும், அந்த பதவிகள் தொடர்பான தகுதிகளை பூர்த்தி செய்யாததாலும் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை கருத்தில் கொண்டு, ஆளுநர் மாகாண பிரதம செயலாளர் துசித பீ. வணிகசிங்கவிற்கு அறிவுரை வழங்கினார்.

அதன்படி, மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளராக கடமையாற்றியவர் மாகாண கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளராக திருமதி வளர்மதி நியமிக்கப்பட்டுள்ளார்.

மாகாணக் கல்வித் திணைக்களத்தின் மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றிய என். திரு.சிவலிங்கம் மாகாண கூட்டுறவு திணைக்கள ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மாகாண கூட்டுறவு ஆணையாளராக கடமையாற்றிய ஏ.எல்.எம். அஸ்மி கல்முனை மாநகர சபை ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மாகாண கலாசார பணிப்பாளராக கடமையாற்றிய திரு.எஸ்.நவநீதன் மாகாண கிராமிய கைத்தொழில் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவைகள் திணைக்களத்தின் மேலதிக ஆணையாளராகப் பணியாற்றியவர்  மாகாண கலாசார திணைக்களத்தின் பணிப்பாளராக  சரண்யா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, மாகாண கூட்டுறவுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளராகப் பணியாற்றியவர் மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளராக தெய்வேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மாகாண கிராமிய கைத்தொழில் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளராக பணியாற்றியவர் மாகாண கூட்டுறவு சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் அண்மையில் மாகாண பிரதம செயலாளர் துசித பீ. வணிகசிங்க தலைமையில் வழங்கப்பட்டன. 

புதிதாக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் இன்று (02) காலை திருகோணமலையில் உள்ள  ஆளுநர் செயலகத்தில் மாகாண ஆளுநர்  அனுராதா யஹம்பத்தை சந்தித்து விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *