நாட்டை கட்டியெழுப்ப மஹிந்தவின் அனுபவமும் தேவை! மஹிந்த அமரவீர

பொதுஜன பெரமுன தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் அனுபவமும் நாட்டின் அபிவிருத்தி பயணத்திற்கு பயன்படுத்தப்பட வேண்டும் என விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள அனைவரினதும் ஆதரவோடு ஜனாதிபதி செயற்படுவதாகவும், ஆட்சியை சிறப்பாக கொண்டு செல்ல கட்சிகளில் உள்ள மூத்தவர்களின் அனுபவம் தேவை எனவும் அமைச்சர் கூறினார்.

நாட்டை வெல்லும் வேலைத்திட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து ஆதரவளிக்க வேண்டியது அவசியமானது.

நாட்டை அழித்து ஆட்சியை கவிழ்த்து அதிகாரத்தைப் பெறுவதல்ல, சர்வகட்சி அரசாங்கத்துடன் இணைந்து நாட்டை வெற்றிகொள்ளும் வேலைத்திட்டத்தை வலுப்படுத்துவதே தற்போது செய்ய வேண்டிய பணி என்றும் மஹிந்த அமரவீர கூறியுள்ளார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *