சர்வ கட்சி அரசாங்கம் அமைப்பதில் தமிழர்களுடைய அபிலாஷைகளை பேரம் பேச வேண்டும்- யோகலிங்கம் வேண்டுகோள்!

சர்வ கட்சி அரசாங்கம் அமைப்பதில் தமிழர்களுடைய அபிலாஷைகளை பேரம் பேச வேண்டும் .தமிழர்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்குவதற்கான உத்தரவாதத்தினை உறுதிப்படுத்தப்படவேண்டும் என அரசியல் ஆய்வாளர் யோகலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றுகையில்

பொறுப்புக்கூறலுக்கும் அரசியல் தீர்வுக்கும் கால அட்டவனையினை வகுத்து செயற்பட வேண்டும் ,இதற்கு எல்லாவற்றுக்கும் சம்மதம் தெரிவிப்பார்களாக இருந்தால் மட்டுமே இந்த சர்வதேச கடசிக்கு தமிழ் மக்கள் ஆதரவு கொடுப்பார்கள்.

இதற்கமைய எழுத்து உத்தரவாதம் தர வேண்டும். இதனால் ஏனைய நாடுகளின் அழுத்தங்களை பெற்று இந்த விடயங்களில் முன்னேற்றம் காண முடியும் .எனவே வெறுமனே வெற்றுக்காசோலையில் கையெழுத்து இடுவது போன்ற செயற்பாட்டினை முன்னெடுப்பது தமிழ் அரசியலுக்கு ஒரு போதும் சாதகமா இருக்க மாட்டாது .

அதே போன்று மலையக மக்களின் அபிலாஷைகளை ஆவணம் செய்துள்ளார்கள் ,எனவே இதற்கும் சம்மதம் கிடைக்குமா இருந்தால் சர்வ கடைசிக்கு ஆதரவு கொடுப்பது என்பது பொருத்தமாக இருக்கும் ,ஆனால் இந்த சர்வ கடைசி அரசாங்கம் நிரந்தமானது இல்லை என்ற நிலை இருப்பதனால் இதற்கு மலையக கட்சியான தமிழ் முற்போக்கு கட்சி ஆதரவு கொடுக்காது எனவு் தெரிவித்தார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *