பதிவுச் சான்றிதழ், வாகன இலக்கத்தகடு இல்லாமல் வாகன உரிமையாளர்கள் நிர்க்கதி நிலையில் இருப்பதாகத் தெரிய வருகிறது.
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தினால் வழங்கப்படும் வாகனப் பதிவுச் சான்றிதழ்கள் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் பல மாதங்களாக தாமதமாகி வருவதாக திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வழக்கமான சேவைகள் மூலம் வழங்கப்படும் விண்ணப்பப் படிவங்களுக்கு அச்சிடப்பட்ட ஆவணங்களின் சான்றிதழ்கள், தலைமை அஞ்சலகத்தில் ஒப்படைக்கப்பட்டாலும், அவற்றை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதே இதற்குக் காரணம்.
பதிவு முடிந்து பல மாதங்களாகியும் தங்களது வாகனத்துக்கான பதிவுச் சான்றிதழ் வரவில்லை என மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்துக்கு தினமும் நூற்றுக்கணக்கான தொலைபேசி அழைப்புகள் வருகின்றன.
பதிவுச் சான்றிதழ், சாரதி அனுமதிப்பத்திரம், வாகன இலக்கத் தகடு போன்றவற்றை கூரியர் சேவை மூலம் அனுப்ப, ஓராண்டுக்கு முன் முடிவு செய்யப்பட்டு, இதுவரை அந்தத் திட்டம் செயற்படுத்தப்படவில்லை.
இது குறித்து, மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் ஜெனரல் சுமித் அழகக்கோன் கூறுகையில், பதிவுச் சான்றிதழ்கள், சாரதி அனுமதிப்பத்திரம் , வாகன இலக்கத்தகடு என்பவற்றை கூரியர் மூலம் விரைவில் அனுப்ப அமைச்சு மட்டத்தில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.
பிறசெய்திகள்