
கொழும்பு,ஓகஸ்ட் 02
நாட்டில் மேலும் 07 கொவிட் இறப்புக்கள் பதிவாகியுள்ளன.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று(01) இந்த இறப்புக்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இதுவரை பதிவான கொவிட் இறப்புக்களின் மொத்த எண்ணிக்கை 16,566 ஆக அதிகரித்துள்ளது.
3 ஆண்களும் 4 பெண்களும் கொவிட்-19 தொற்றினால் மரணித்தனர்.
30 முதல் 59 வயதிற்கிடைப்பட்ட 2 பேரும், 60 வயதிற்கு மேற்பட்ட 5 பேரும் கொவிட்-19 தொற்றினால் மரணித்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.