புதுக்காடு பகுதியில் கசிப்பு உற்பத்தி செய்த இருவர் கைது

இராமநாதபுரம்,ஓகஸ்ட் 02

இராமநாதபுரம், புதுக்காடு பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இராமநாதபுரம், புதுக்காடு, காட்டுப் பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 600 லீற்றர் கோடாவும், 62 அறுபத்தி இரண்டு போத்தல் கசிப்பும் சிறப்பு அதிரடிபடையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இரண்டு சந்தேக நபர்களையும் சிறப்பு அதிரடிப்படையினர் தருமபுரம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இவர்கள் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *