
கொரோனா தடுப்பூசிகளை விரைவாக பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும், கொரோனா மரணங்களின் எண்ணிக்கையும் மீண்டும் அதிகரித்து வருகின்ற நிலையில் ஜனாதிபதி இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் நேற்று 07 கொரோனா இறப்புக்கள் பதிவாகியுள்ளன.
30-59 வயதிற்கிடைப்பட்ட 2 பேரும், 60 வயதிற்கு மேற்பட்டமுதல் 5 பேரும் கொவிட்-19 தொற்றினால் மரணித்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, இதுவரை பதிவான கொரோனா இறப்புக்களின் மொத்த எண்ணிக்கை 16,566 ஆக அதிகரித்துள்ளது.
பிறசெய்திகள்