இம்முறை இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு பெண் தடகள வீரரும் மூத்த அதிகாரியும் ஐந்தாம் நாள் (ஆகஸ்ட் 02) நிகழ்வுகளைத் தொடர்ந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பர்மிங்காம் காவல்துறை மற்றும் தேசிய ஒலிம்பிக் கமிட்டி (என்ஓசி) இது தொடர்பாக விசாரணையை ஆரம்பித்துள்ளதாக இலங்கை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
காணாமல் போன இரண்டு இலங்கையர்களின் பெயர்கள் இன்னும் பகிரங்கப்படுத்தப்படவில்லை எனினும், பெண் ஜூடோ வீரரும் இலங்கை ஜூடோ அணியின் முகாமையாளரும் முகாமில் இருந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாட்டு ஊடகங்களின்படி, திங்கட்கிழமை முதல் சுற்றில் தடகள வீராங்கனை தோல்வியடைந்ததை அடுத்து, பெண் ஜூடோகாவும் அணி மேலாளரும் காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
பிறசெய்திகள்