ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் இலங்கை ஜனாதிபதியோடு உரையாடல்

கொழும்பு, ஓகஸ்ட் 3

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஜனாதிபதி ஷேக் மொஹமட் பின் சயீத் அல் நஹ்யான், இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து, நாட்டின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்தார்.

“ஒகுறித்த தொலைபேசி அழைப்பில், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஜனாதிபதி ஷேக் மொஹமட் பின் சயீத் அல் நஹ்யான், இலங்கையின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திரு. ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்து தெரிவித்தார்,மேலும் , இலங்கையை ஸ்திரத்தன்மை மற்றும் சமாதானத்தை நோக்கி அழைத்துச் செல்வதில் வெற்றிபெற வாழ்த்தினார்.

இரு தலைவர்களும் பில்லெட்ரல் உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிகள் மற்றும் பரஸ்பர நலன்கள் குறித்து விவாதித்தனர். இதனை ஐக்கிய அரபு அமீரகம் ஒரு அறிக்கை ஊடாக தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *