ஜனாதிபதியின் ஆசனத்தில் அமர்ந்து படமெடுத்த நபர் கைது

கொழும்பு, ஓகஸ்ட் 3

கடந்த மாதம் 9ஆம் திகதி கொழும்பு – கோட்டை ஜனாதிபதி மாளிகைக்குள் சென்று, ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்து படமெடுத்த நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தெரணியகல பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர், சமன்புரகம பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவராவார்.

அதேநேரம், கொழும்பு மத்திய குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளரான ரெட்டா எனப்படும் ரதிந்து சேனாரத்னவுக்கு, கொழும்பு – கோட்டை நீதவான் பிணை வழங்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *