மஹரகமவில் ரயில் தடம் புரண்டது

மஹரகமவில் ரயில் தடம் புரண்டதால் களனிவெளி ரயில் பாதை தடைப்பட்டுள்ளது.

அவிசாவளையில் இருந்து வந்த ரயில் மஹரகம நிலையத்தில் தடம் புரண்டுள்ளது.

இதன் காரணமாக களனிவெளி மார்க்கத்தில் ரயில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு நோக்கிச் செல்லும் ரயில் தாமதமாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், மற்ற பாதையில் ரயில் இயக்கப்படும் என்றும் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

தடம் புரண்ட ரயிலை விரைவில் சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *