6600 லீற்றர் டீசல் விற்பனை செய்ய முயன்ற நால்வர் கைது!

சட்டவிரோதமான முறையில் 6,600 லீற்றர் பவுசர் டீசல் ஏற்றி விற்பனை செய்ய முற்பட்ட எரிபொருள் பவுசரின் சாரதி, உதவியாளர் மற்றும் இரண்டு நபர்களை மீகொட பொலிஸார் கைது செய்துள்ளனர்.

6,600 லீற்றர் டீசல் ஏற்றிச் செல்லும் பௌசர் மீகொட பிரதேசத்திலுள்ள தொழிற்சாலையொன்றுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக கொண்டுவரப்பட்டது.

டீசல் லிட்டருக்கு 900 ரூபாய். முழு பவுசர் டீசலையும் 1000 ரூபாய்க்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்..

அதன்படி, எரிபொருள் பவுசரின் சாரதி, அவரது உதவியாளர் மற்றும் எரிபொருள் பவுசருடன் கண்காணிப்பாளராக செயல்பட்ட இருவரை பொலிஸார் கைது செய்தனர்.

சட்டவிரோதமான முறையில் பாரியளவில் அதிக விலைக்கு எரிபொருளை வழங்கும் மோசடி இடம்பெற்று வருவதாக மீகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இரகசிய அதிகாரிகளை நியமித்து சம்பந்தப்பட்ட எரிபொருள் விநியோகஸ்தர்களுடன் தொலைபேசி ஊடாக தொடர்புகளை ஏற்படுத்தி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மீகொட பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலைக்குள் எரிபொருள் பவுசர் நுழைந்ததை அடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

குறித்த எரிபொருள் கையிருப்புகளை ஏற்றிச் சென்ற வாகனம் குறித்த இடத்திற்கு வருவதற்கு முன்னர், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பில் கண்காணிப்பாளராக செயற்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அதிகாரி ஒருவரின் ஆலோசனைக்கு அமைய அதிக விலைக்கு எரிபொருளை விற்பனை செய்யும் மோசடி நீண்ட காலமாக இடம்பெற்று வருவதாகவும் முத்துராஜவெலயில் இருந்து ஏற்றி வந்த எரிபொருள் கையிருப்பு வழங்குவதற்காக விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கட்டுநாயக்கவில் உள்ள தொழிற்சாலைக்கு மற்றும் மீகொட தொழிற்சாலைக்கு கொண்டு வரப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று ஹோமாகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், இந்த எரிபொருள் மோசடி தொடர்பில் மெகொட பொலிஸார் மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகளால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *