
கொழும்பு, ஓகஸ்ட் 3
நாட்டை வந்தடைந்துள்ள மற்றுமொரு டீசல் கப்பலுக்கான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்
குறித்த கப்பலில் இருந்து டீசல் தரையிறக்கும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மற்றுமொரு பெட்ரோல் கப்பல் மற்றும் டீசல் கப்பலுக்கான முற்பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்