சீரற்ற வானிலை: ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்த 12,289 பேர் பாதிப்பு

கடந்த சில நாட்களாக நாட்டில் பெய்து வரும் கடும் மழை மற்றும் பலத்த காற்றினால் ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்த 12,289 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை மூன்று பேர் இறந்துள்ளனர் என்றும் நான்கு பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 2,374 பேர் தற்காலிக தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் சீரற்ற காலநிலை காரணமாக 326 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *