ஜனாதிபதியின் மற்றுமொரு அதிரடி

கொழும்பு. ஓகஸ்ட் 3

மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அழைக்கப்பட்டுள்ள அதிதிகளுக்கு வழங்கப்படும் தேநீர் விருந்துபசாரத்துக்கான செலவை நாடாளுமன்றத்தின் மூலம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் நாடாளுமன்ற அதிகாரிகள் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளனர்.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் 03ஆவது கூட்டத்தொடர் இன்று உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்படுவதையடுத்து மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அழைக்கப்பட்டுள்ள அதிதிகளுக்கென ஏற்பாடு செய்யப்படும் தேநீர் விருந்துபசாரத்துக்கு செலவாகும் நிதியை தாம் பொறுப்பேற்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்ற அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தார்.

நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடர் ஆரம்பித்து வைக்கப்பட்ட பின் ஜனாதிபதியால் கொள்கை விளக்கவுரை நிகழ்த்தப்படுவதையடுத்து சம்பிரதாயபூர்வமாக தேநீர் விருந்துபசாரம் நடைபெறுவது வழக்கம். எனினும் அது நாடாளுமன்றத்தின் மூலமே ஏற்பாடு செய்வதாக இதன்போது நாடாளுமன்ற அதிகாரிகள் ஜனாதிபதி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *