தொழில்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் விவசாய அமைச்சருக்கும் அகில இலங்கை கோழிப்பண்ணையாளர் சங்கத்தினருக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
கோழி மற்றும் முட்டை உற்பத்தி 40 சதவீதம் குறைந்துள்ளதாக சங்கத்தின் தலைவரான அஜித் குணசேகர தெரிவித்தார்.
கோழிப்பண்ணை தொழிலை நிலைநிறுத்துவதற்கு தேவையான மூலப்பொருட்களை வழங்க பேச்சுவார்த்தையின் போது கோரிக்கை விடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

சோளம், வெள்ளை அரிசி மற்றும் கால்நடைத் தீவனமாகப் பயன்படுத்தப்படும் இதர பொருட்கள் பற்றாக்குறையாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பண்ணை உரிமையாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும், அதேவேளை சில சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்கள் மூடப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
யுனிசெஃப் கருத்துப்படி, உணவில் புரதம் இல்லாததால் குழந்தைகளில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நிதி அமைச்சுடனும், அரச மற்றும் தனியார் வங்கிகள் ஊடாகவும் மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கு வசதியாக விவசாய அமைச்சுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளுமாறு அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
பிறசெய்திகள்