சாரணர்கள் சமூகத்தின் தூணாகவும் சமூக சேவகராகவும் விளங்க வேண்டும்- யாழ் அரசாங்க அதிபர்

யாழில் தேசிய சாரணர் மாதத்தினை முன்னிட்டு இன்று சாரணர்களுக்கான நிதி சேகரிப்பு அட்டையானது யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரினால் இன்று உத்தியோகப்பூர்வமாக வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

அதனைத்தொடர்ந்து இது தொடர்பாக யாழ் .மாவட்ட அரசாங்க அதிபர் கே.மகேசன் கருத்து தெரிவித்திருந்தார்

அவர் தெரிவித்ததாவது ;

தேசிய சாரணர் மாதத்தினை முன்னிட்டு சாரணர் சேவையினூடக நிதி சேகரிப்பு செயற்பாடு என்பது ஒவ்வொரு வருடமும் வழமையான விடயமாகும் .

மேலதிக அரசாங்க அதிபர்கள் உள்ளிட்டவர்கள் இந்த சாரணர் அமைப்பிற்கு பல்தரப்பட்ட உதவிகளை வழங்கி வருகின்றோம் .அந்தவகையில் எமது யாழ் மாவட்ட செயலகத்தினூடாக காணிகள் வழங்கி இருந்தோம்.

சாரணர் சங்கத்தினை இயக்குவதற்குரிய நிதிகள் இந்த சேவைகளின் ஊடாகவே சேகரிக்க வேண்டும். ஒரு ஒரு சாரணராக இருப்பவர் சமூக சேவகராகவும் ,சமூக வழிகாட்டியாகவும் ,சமூகத்தின் தூணாகவும் விளங்க வேண்டும்.

இந்த சாரணர் சங்கத்தில் உள்ள மாணவர்கள் ,அங்கத்தவர்கள் ஆகியோரை பராட்டுவதுடன் அவர்களின் செயற்பாடுகள் நல்ல செயற்பாடுகளாக அமைந்து எமது மாவட்டத்திற்கு உங்களது சேவை கிடைக்க வேண்டும் என வாழ்த்துகிறோம்.என்றார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *