அர­சில் இணை­வது குறித்து முடிவு விரை­வில் அறி­விப்பு- கூட்­ட­மைப்­பின் தலை­வர்

சர்­வ­கட்சி அர­சில் இணை ­வது குறித்து தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் கட்சி ரீதி­யான முடிவு விரை­வில் எடுக்­கப்­ப­டும் என்று அதன் தலை­வர் இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார்.

சர்­வ­கட்சி அர­சாங்­கத்­துக்கு ஆத­ரவு வழங்­கப்­ப­டும் என்று அவர் ஏற்­க­னவே அறி­வித்­துள்ள நிலை­யில், அந்த ஆத­ரவு எவ்­வ­கை­யி­லான ஆத­ர­வாக அமை­யும் என்­பது தொடர்­பில் வழங்­கிய செவ்­வி­யொன்­றி­லேயே இவ்­வாறு தெரி­வித்­தார் சம்­பந்­தன்.

‘பல பிரச்­சி­னை­க­ளைத் தீர்ப்­ப­தற்­குச் சர்­வ­கட்சி அரசு ஒரு வழி­மு­றை­யா­கும். அதற்­குத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு முழு­மை­யான ஆத­ரவு வழங்­கத் தயா­ராக இருக்­கின்­றது. ஆனால், எந்த வகை­யி­லான ஆத­ரவை அல்­லது பங்­க­ளிப்பை வழங்­கு­வது என்­பது கட்சி ரீதி­யா­கவே தீர்­மா­னிக்­கப்­ப­டும்’ – என்று அவர் மேலும் தெரி­வித்­தார்.

இதே­வேளை, சர்­வ­கட்சி அர­சாங்­கத்­தில் இணை­ய­வேண்­டும் என்று ஜனா­தி­பதி ரணில் அனுப்­பிய கடி­தத்­துக்­கும் சம்­பந்­தன் பதில் அனுப்­பி­யுள்­ளார். ‘சர்­வ­கட்சி தேசிய வேலைத்­திட்­டத்­துக்கு முழு ஆத­ரவு வழங்­கப்­ப­டும். நாடு எதிர்­கொண்­டுள்ள அனைத்­துத் தேசி­யப் பிரச்­சி­னை­க­ளும் தீர்க்­கப்­பட வேண்­டும்’ என்று தனது பதில் கடி­தத்­தில் வலி­யு­றுத்­தி­யுள்­ளார் சம்­பந்­தன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *