
முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு, சிங்கப்பூரில் எந்தச் சிறப்புச் சலுகை களும் இராஜதந்திர விலக்குரிமையும் வழங்கப்படவில்லை என்று சிங்கப் பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
கோத்தாபயவுக்கு சிறப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளதா? என்று சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
பொதுவாக, சிங்கப்பூர் அரசாங்கம், வெளிநாடுகளின் முன்னாள் தலைவர்கள் அல்லது அரசாங்கத் தலைவர்களுக்கு சலுகைகளை வழங்குவதில்லை.
இலங்கையிலிருந்து தப்பியோடி மாலைதீவுக்குள் புகுந்த கோத்தாபய ராஜபக்ச, கடந்த மாதம் 14ஆம் திகதி சிங்கப்பூருக்குத் தனிப்பட்ட முறையில் வந்திருந்தார்.
அவரது குறுகியகால நுழைவிசைவு அனுமதிக்கு 14 நாள் நீடிப்பு பெறப்பட்டதைத் தொடர்ந்து அவர் இம்மாதம் 11ஆம் திகதி வரை சிங்கப்பூரில் தங்கியிருப்பார் – என்றார்.