கோத்­தா­பய ராஜ­பக்­ச­வுக்கு சிறப்­புச் சலுகை கிடை­யாது – சிங்­கப்­பூர்

முன்­னாள் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்­ச­வுக்கு, சிங்­கப்­பூ­ரில் எந்­தச் சிறப்­புச் சலு­கை­ க­ளும் இரா­ஜ­தந்­திர விலக்­கு­ரி­மை­யும் வழங்­கப்­ப­ட­வில்லை என்று சிங்­கப் ­பூர் வெளி­வி­வ­கார அமைச்­சர் விவி­யன் பால­கி­ருஷ்­ணன் தெரி­வித்­தார்.

கோத்­தா­ப­ய­வுக்கு சிறப்­பு­ரி­மை­கள் வழங்­கப்­பட்­டுள்­ளதா? என்று சிங்­கப்­பூர் நாடா­ளு­மன்­றத்­தில் நேற்­று­முன்­தி­னம் எழுப்­பப்­பட்ட கேள்­விக்­குப் பதி­ல­ளிக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

பொது­வாக, சிங்­கப்­பூர் அர­சாங்­கம், வெளி­நா­டு­க­ளின் முன்­னாள் தலை­வர்­கள் அல்­லது அர­சாங்­கத் தலை­வர்­க­ளுக்கு சலு­கை­களை வழங்­கு­வ­தில்லை.

இலங்­கை­யி­லி­ருந்து தப்­பி­யோடி மாலை­தீ­வுக்­குள் புகுந்த கோத்­தா­பய ராஜ­பக்ச, கடந்த மாதம் 14ஆம் திகதி சிங்­கப்­பூ­ருக்­குத் தனிப்­பட்ட முறை­யில் வந்­தி­ருந்­தார்.

அவ­ரது குறு­கி­ய­கால நுழை­வி­சைவு அனு­ம­திக்கு 14 நாள் நீடிப்பு பெறப்­பட்­ட­தைத் தொடர்ந்து அவர் இம்­மா­தம் 11ஆம் திகதி வரை சிங்­கப்­பூ­ரில் தங்­கி­யி­ருப்­பார் – என்­றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *