
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மேற்கொண்ட தாக்கு தலில், அல் குவைதா அமைப்பின் தலைவர் அய்மான் அல்- ஜவாஹிரி உயிரிழந்தார்.
அல் குவைதா அமைப்பின் தலைவர் பின்லேடன் 2011ஆம் ஆண்டு பாகிஸ்தானில் பதுங்கியிருந்தபோது அமெரிக்கப் படைகள் நடத்திய சிறப்பு இராணுவ நடவடிக்கையில் கொல்லப்பட்டார்.
பின்லேடன் இறந்த பின்னர் அல் குவைதா அமைப்பை அல் ஜவாஹிரி வழிநடத்தி வந்தார். இவர் ஆப்கானிஸ்தானில் தங்கியிருந்து அல் குவைதாவை வழிநடத்தினார்.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் பின்னிரவு அமெரிக்கா ஆளில்லா ட்ரோன் மூலம் நடத்திய சிறப்பு இராணுவ நடவடிக்கையில் அடுத்து அவர் கொல்லப்பட்டார்.
இதை அமெரிக்க அதிபர் பைடன் நேற்று உறுதிப்படுத்தினார்.
‘அல் குவைதா தலைவர் அய்மான் அல்-ஜவாஹிரி காபூலில் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். செப்ரெம்பர் 11 தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நீதி வழங்கப்பட்டுள்ளது.
எவ்வளவு காலம் சென்றாலும், நீங்கள் எங்கு மறைந்திருந்தாலும், எங்கள் மக்களுக்கு நீங்கள் அச்சுறுத்தலாக இருந்தால், அமெரிக்கா உங்களைக் கண்டுபிடித்துத் தண்டிக்கும்’ என்று பைடன் தெரிவித்தார்.