
இலங்கை கடற்படையினர் மன்னார் பகுதியில் நேற்று மாலை நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையில் சுமார் 240 கிராம் கொண்ட 47 கிலோ நிறையுடைய (ஈரத்துடனான எடை) கேரள கஞ்சா பொதி கைப்பற்றப்பட்டுள்ளது.
வட மத்திய கடற்படை கட்டளைப் பிரிவினர் படகு மூலம் மன்னார் மணற்பாறை பகுதியில் நேற்று மாலை வேளையில் மேற்கொண்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையில், கடத்தல்காரர்களால் 19 பொதிகளில் அடைக்கப்பட்டு புதைக்கப்பட்டிருந்த சுமார் 47 கிலோ 240 கிராம் எடையுடைய கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
கடற்படை சோதனை காரணமாக இந்த கஞ்சாவை நாட்டிற்கு கொண்டு வர முடியாமல் கடத்தல்காரர்கள் மறைத்து வைத்திருக்கலாம் என கடற்படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த பெறுமதி 14 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக குறித்த கஞ்சா பொதிகள் காவல்துறையினரிடம் கையளிக்கபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிறசெய்திகள்