ராஜபக்ஷ குடும்பம் தொடர்பில் யஸ்மின் சூக்கா வெளியிட்டுள்ள கருத்து

கொழும்பு, ஓக 3

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ உள்ளடங்கலாக ராஜபக்க்ஷ குடும்ப உறுப்பினர்கள் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்துகின்ற முக்கிய பொறுப்புக்களை வகித்ததாக சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

எனவே, தாம் சிங்கப்பூர் சட்ட மா அதிபரிடம் சமர்ப்பித்திருக்கும் குற்றவியல் முறைப்பாட்டில் மனித உரிமை மீறல் குற்றங்களுக்கு அப்பால் பாரிய ஊழல், மோசடிகள் உள்ளடங்கலாக நாட்டின் தற்போதைய நிலைக்குக் காரணமான பொருளாதாரக் குற்றங்கள் தொடர்பான ஆவணங்களும் உள்ளடக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *