புதிய புகையிரத பொது முகாமையாளர் நியமனம்

கொழும்பு, ஓக 3

புகையிரத பொது முகாமையாளராக இருந்த தம்மிக்க ஜயசுந்தர குறித்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு, போக்குவரத்து அமைச்சின் மேலதிக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய புகையிரத பொது முகாமையாளராக நிதி அமைச்சில் திட்டமிடல் பணிப்பாளராக பணியாற்றிய டபிள்யூ.பீ. எஸ். ஈ. பி. குணசிங்க நியமிக்கப்பட்டுள்ளதுடன், அவர் இதற்கு முன்னர் சுமார் 7 மாதங்கள் புகையிரத பொது முகாமையாளராக கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *