
கொழும்பு, ஓக. 3:
ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தின் புனரமைப்பு பணிகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், துறைசார் அதிகாரிகள் உட்பட சம்மந்தப்பட்ட தரப்பினர் கலந்து கொண்டிருந்த நிலையில், ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அவர்களும் கலந்து கொண்டு அம்பாறை மாவட்ட மக்களின் அபிப்பிராயங்களையும் எதிர்பார்ப்புக்களையும் வெளிப்படுத்தியிருந்தார்.
ஒலுவில் துறைமுகத்தினை நவீன வசதிகளை கொண்ட மீன்பிடித் துறைமுகமாக உருவாக்குவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னெடுத்து வருகின்ற முயற்சிகளின் அடிப்படையில் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது