
யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரை யாழ் .கூட்டுறவுச் சபையின் சார்பாக சந்தித்து முக்கியமாக எரிபொருள் விநியோகம் சீராக நடைபெறுவதற்குரிய வழிமுறைகள் சம்மந்தமாக கலந்துரையாடி இருந்தாக யாழ் .பல்நோக்கு கூட்டுறவுச் சபை தலைவர் கந்தையா மகாதேவன் தெரிவித்திருந்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது;
யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரை யாழ் .பல்நோக்கு கூட்டுறவுச் சபையின் சார்பாக சந்தித்து முக்கியமாக எரிபொருள் விநியோகம் சீராக நடைபெறுவதற்குரிய வழிமுறைகள் சம்மந்தமாக கலந்துரையாடி இருந்தோம்,
அந்தவகையில் எமது சகல விடயங்களையும் கேட்டு எதிர்காலத்தில் சீரான ஒழுங்கு முறையில் QR முறைமையின் கீழ் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் இந்த விடயத்தினை குழப்புவர்களை இனங்கண்டு அதனை வெளியேற்றி சீரான நடைமுறையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியிருந்தார்.
சிறு உற்பத்தியாளர்கள், விவசாயிகள் ஆகியோருக்கு டீசலினை கொடுக்கக்கூடிய ஒழுங்கு தற்போது நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் அதனை சீரான முறையில் ஒழுங்கு செய்வதற்குரிய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
யாழ் மாவட்டத்தினை பொறுத்தளவில் நுகர்ச்சிப் பொருட்கள் கூடிய விலையில் விற்பது தொடர்பான தகவலினை கவனத்திற்கு கொண்டு சென்று புகையிரதம் மூலம் கொழும்பிலிருந்து உணவுப் பொருட்களை கொண்டு வருவதற்குரிய வசதிகளை கூட்டுறவுச்சங்கங்களுக்கு செய்து தர வேண்டும் என கேட்டிருந்தோம் .
இதற்கு அவர் இணங்கி அதற்குரிய முயற்சிகளை இன்றிலிருந்து பொருட்களை கொண்டு வந்து குறைந்த விலையில் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் பல்நோக்கு கூட்டுறவுச் சங்கங்கங்களுக்கு உறுதுணையாக இருப்பேன் எனவும் ஹெரிவித்திருந்தார்.என்றார் .
பிறசெய்திகள்